ஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்

“ஜோதிட மகாகுரு” “ஜோதிடக்கலை அரசு” ஆதித்ய குருஜி அவர்கள் தமிழ் ஜோதிட, ஆன்மீக இதழ்களில் ராசிபலன்களும், கட்டுரைகளும் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில்களும் தற்போது எழுதி வருகிறார்.

பள்ளிப்படிப்பு முதல் ஜோதிடம் தவிர வேறு எதுவும் தெரியாத குருஜி அவர்கள் இந்திய வேத ஜோதிடத்தில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சிகள் செய்த அனுபவம் உடையவர்.

ஜோதிட உலகிற்கு அவர் ஆராய்ந்து  அறிவித்த “பாபக்கிரகங்களின் சூட்சும வலுத் தியரி” ஜோதிடம் அறிந்தவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிடத்தை நமக்கு அருளிய ஞானிகள் குருபகவானை ஏன் சுபக்கிரகம் என்று அழைத்தார்கள்?சனியை ஏன் பாபக் கிரகமாக் கினார்கள்? என்ற சூட்சுமத்தை முதன்முதலாக கண்டு பிடித்து வெளிப்படுத்தியவர் உலகிலேயே இவர் ஒருவர்தான்.!

அதோடு சுப அசுப கிரக வரிசைகளான குரு சுக்கிரன் புதன் வளர்பிறைச் சந்திரன் செவ்வாய் சனி என்ற வரிசைக்கிரமத்தை ஞானிகள் எப்படி அமைத்தார்கள் என்பதையும் விஞ்ஞானப்பூர்வமாக கண்டு பிடித்துச் சொன்ன ஒரே ஜோதிடரும் உலகிலேயே இவர் மட்டும்தான்.

இயற்கைச் சுபக்கிரகங்கள் கேந்திரங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற விதியின் மறைவில் இயற்கைப் பாபக்கிரகங்கள் திரிகோணங்களுக்கு அதிபதியாகக் கூடாது என்ற தத்துவம் மறைந்துள்ளது. அதுவே பாதகாதிபதி கிரக சூட்சுமம் என்பதை விளக்கி ஆதித்ய குருஜி எழுதிய பாதாகாதிபதி பற்றிய ரகசியங்கள் என்ற ஆய்வுக் கட்டுரை பல சூட்சுமங்களை ஜோதிடர்களுக்கு சொல்லியது.

பலன் சொல்லுவதில் ஜோதிடர்களைத் தலை சுற்றவைக்கும் ராகு கேதுக்களின் சூட்சுமங்களை விளக்கி குருஜி அவர்கள் எழுதியுள்ள “சாயாக் கிரகங்களின் சூட்சும நிலைகள்” என்ற தொடர் கட்டுரைகள் மற்றும் “சனிபகவான் எப்படி ஆயுளுக்குக் காரகன் ஆனார்?” என்ற சூட்சுமத்தை அவர் விளக்கிய விதம் போன்றவைகள் குருஜியின் மேதமையை விளக்கும்.

குருஜி அவர்கள் தற்போது இந்திய வேதஞான ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருக்கிறார்.

5 comments :

  1. வணக்கம் அய்யா என் பெயர் அய்யப்ப குரு. 24/8/1994 & 11.54 am
    சிவகங்கை... அய்யா கேட்பதற்கு மன்னிக்கவும் தினம் தினம் மனது வலிக்கிறது.மிகவும் வித்தியாசமாக தோன்றுகிறது மனது.தற்கொலை செய்வதற்கு தவிக்கிறது, காரணம், எனக்கு எதுவும் கிடைக்கவில்லையே என்று,கேட்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் அதுதான் உண்மை, எனது பெற்றோரும் எனக்கு சொத்து சேர்த்துவைக்கவில்லை...எனக்கு திருமணமும் நடக்க வில்லை, இப்பொழுது எனக்கு வயது 27.என் பெற்றோருக்கும் என் மீது அக்கறை இல்லை.என்னுடன் படித்த அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது, வெளியே பார்க்கும் போது என்னை கேலி செய்கிறார்கள்.என் மனம் நொந்து போகிறது, எனக்கு எப்பொழுது தான் திருமணம் நடக்கும், காதல் திருமணமா, பெண் எப்படி இருப்பாள் எங்கு இருப்பாள், எப்போது பார்ப்பேன்..உங்களுக்கு நேரமிருந்தால் பதில் கூறவும். நன்றி..

    ReplyDelete
    Replies
    1. 90s Kid na appudi thaan bro.. ellarukkum athey thaan..

      Delete
  2. I want speak with you sir. My daughter dob 25.5.2011, time 3.06 pm .அவள் வருங்கால வாழ்க்கை மற்றும் படிப்பு ஆயுள் பலம் பற்றி அறிய வேண்டும்.

    ReplyDelete
  3. குருவை சுபர் என்றும் சனியை பாபர் என்றும் ஜோதிடம் தோன்றியது முதலாக நம் முன்னோர்கள் ஆய்வு செய்து சொல்லி வந்துள்ளார்கள். இதில் புதிதாக கண்டு பிடிக்க என்ன இருக்கிறது? இவர் தான் கண்டு பிடித்தார் என்று தற்கால ஜோதிடர்கள் பெருமை கொள்ள என்ன இருக்கிறது?

    ReplyDelete